Pair of Vintage Old School Fru
Tamil Full Movie




காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அத்தேர்தலில் திமுக தோல்வியடைந்ததை அடுத்து இவருக்கு சினிமா வாய்ப்புகளும் பறிபோனது. இவரை தங்களது படங்களில் நடிக்கவைக்க எந்தவொரு தயாரிப்பாளரும், இயக்குனரும் முன்வரவில்லை.

இந்நிலையில், மறுபடியும் ரீ எண்ட்ரி கொடுக்கும் வகையில், இவர் நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் இயக்குனர் சிம்புதேவனுடன் இணைந்து செயல்பட்டார். ஆனால் படத்திற்கு பட்ஜெட் எகிறவே, படம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவது முடிவாகி உள்ளது. இப்படத்திற்கான கதையை ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய டாக்டர் காயத்ரி எழுதியுள்ளார். வடிவேலுவுக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் இந்த கதை பிடித்துவிட்டதால் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்துவிட்டார்களாம்.

இதுகுறித்து கே.எஸ்.ரவிக்குமார் கூறும்போது, ‘கோச்சடையானி’ல் எனது பணி முடிந்து விட்டது. ‘கோச்சடையான்’ ரிலீசுக்குப் பிறகு ‘ராணா’ பணிகள் தொடங்கலாம் என ரஜினி கூறியுள்ளார். ‘பஞ்சதந்திரம் பார்ட் 2’ பண்ணலாம் என்ற யோசனையும் உள்ளது. இதற்கிடையில்தான் டாக்டர் காயத்ரி, வடிவேலுக்கு ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன் என்று சொன்னார். அந்த கதை ரொம்ப பிடித்திருந்தது. வடிவேலுவும் கதையை கேட்டுவிட்டு என்னிடம் வந்து பண்ணலாமான்னு கேட்டார். சரி என்று சொல்லிவிட்டேன். இந்த கதையை பிரம்மாண்ட செலவில் படமாக்க இருக்கிறோம். தயாரிப்பாளர் கிடைத்ததும் ஆரம்பித்து விடுவோம் என்றார்.

இப்படத்திற்கு ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’ என பெயர் வைத்திருக்கின்றனர். ஆப்பிரிக்கா காட்டில் தன்னந்தனியாக மாட்டிக் கொள்ளும் வடிவேலு, அங்கு அனுபவிக்கும் சிக்கல்களையும், சிரமங்களையும் கதையாக உருவாக்கியிருக்கிறார்கள்.